Archives: மார்ச் 2016

என்னைப் பின்பற்று

உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் நிலையங்களில் எடை குறைக்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் விரும்புகிறவர்களுக்கு, பல்வேறு செயல்முறைத் திட்டங்களை அறிவிக்கின்றனர். ஓரு உடல் தகுதிக்கான மையத்தில் குறைந்தது 50 பவுண்ட் எடை குறைத்து ஆரோக்கியமாக வாழ விரும்புகிறவர்களையே சேர்த்துக் கொள்கிறது. ஒரு பெண், அவள் சென்ற உடல் தகுதி நிலையத்திற்கு, அவளோடு கூட வந்த எடை குறைவான, நல்ல உடல்வாகுடைய பெண்கள் அவளைப் பார்த்து வடிவற்ற உடல் அமைப்பு உடையவள் என்று அவளைப் பார்த்து கேலி செய்ததினால், அந்த நிலையத்திற்குச் செல்வதை நிறுத்திவிட்டதாகக் கூறினாள். இப்பொழுது…

கிருபையினால் ஆச்சரியப்படுதல்

மிச்சிகனில் உள்ள கிராண்ட் ராப்பிட்ஸில் வாழ்ந்து வந்த ஒரு பெண், அவளது கணவர் உறங்குவதற்காகப் படுக்கை அறைக்குச் சென்றபின். ஓய்வெடுக்கும் இருக்கையிலேயே உறங்கி விட்டாள். அந்த தம்பதியினர், அறையில் இருந்த நழுவும் கதவினைப் பூட்ட மறந்துவிட்டனர். அதன் வழியாக அழையா விருந்தாளியாக ஒரு மனிதர் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து விட்டான். கணவர் உறங்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்குச் சென்று அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கினான். உறங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன் விழித்துக் கொண்டான். அங்கு நின்று கொண்டிருந்த ஓர் உருவத்தைப் பார்த்து, “அன்பே படுக்கைக்கு…

என் பெலனாகிய தேவன்

பண்டைய பாபிலோனிய வீரர்கள் நன்னடைத்தை உடையவர்கள் அல்ல. அவர்கள் இரக்கமற்றவர்களும் முரடர்களும், வீம்புக்காரராயும் இருந்தார்கள். பிறருக்கு கேடுண்டாக்கும் தன்மையுடையவர்கள். கழுகானது அதன் இரையைப் பாய்ந்து பிடிப்பது போல, அவர்கள் மற்ற நாடுகளின் மேல் தாக்குதல் நடத்துவார்கள். அவர்கள் வல்லமையுடையவர்கள் மட்டுமில்லாது மிகவும் கர்வமும்; உடையவர்கள். உண்மையில் அவர்களது போராடும் திறமையையே கடவுளாக ஆராதிப்பார்கள். அவர்களது தேவனே அவர்களது பெலன் என்று கூறினார்களென்று வேதாகமம் கூறுகிறது (ஆபகூக் 1:11).

இஸ்ரவேல் மக்கள், மீதியானியருக்கு எதிராகப் போராட ஆயத்தமான பொழுது இப்படிப்பட்ட சுயம் சார்ந்த தன்மை இஸ்ரவேலைப்…

ஆச்சரியப்படுதல்

மைக்கல் ஏஞ்சலோ மெரிசி டா காரவாகியோ (1571-1610) என்ற இத்தாலியக் கலைஞர், ஆத்திரத்துடன் செயல்படும் குணத்தையும், வழக்கத்திற்கு மாறாக செயல்படும் திறனுக்கும் பெயர் பெற்றவர். அவர் தமது ஓவியத்தில் வரையும் புனிதர்களுக்கு மாதிரியாக மிகவும் சாதாரண மக்களை மாதிரியாக வைப்பதும், அவரது வண்ண ஓவியத்தைப் பார்ப்பவர்கள், அவரது ஓவியத்தில் வரையப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் ஒருவனாக தங்களைக்காணக் கூடிய முறையிலும் அவரது ஓவியங்கள் இருக்கும். “எம்மாவூரில் இரவு உணவு” என்ற ஓவியத்தில் சத்திரத்தின் உரிமையாளர் நிற்பதாகவும், இயேசுவும், அவருடைய இரண்டு சீஷர்களும் உணவருந்த உட்கார்ந்திருப்பது போலவும் அந்த…

ஈஸ்டர் ஆரம்பம்

ஈஸ்டர் பற்றிய கதையில் ஒரு குறிப்பு எப்பொழுதும் என் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. சிலுவையில் அறையப்பட்டதினால் ஏற்பட்ட தழும்புகளை இயேசு ஏன் வைத்திருந்தார்? உயிர்த்தெழுந்த பின் அவர் விரும்பிய எந்தவிதமான சரீரத்தையும் அவர் உடையவராக இருந்திருக்கலாம். எளிதில் யாவரும் அடையாளம் கண்டு கொள்வதற்காக அவர் தழும்புகளுள்ள சரீரத்தைக் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் அப்படி?

இயேசுவுடைய கைகளில் கால்களில் அவருடைய விலாவில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இல்லாவிட்டால், ஈஸ்டரைப் பற்றிய விவரங்கள் முழுமை பெற்றவைகளாக இருக்க இயலாது (யோவான் 20:27). மனிதர்கள் முத்துப் போன்ற…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை  பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 

ஓர் தனிக் குரல்

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12). 

அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).

மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.

 

ஆவிக்குரிய சுவடை விட்டுச்செல்லுதல்

பதின்ம வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5). 

அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.

தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார். 

இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.

நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம்.